அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 25 பேர் பலியாகினர்.
அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் நகரங்கள் மீது நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மேலும் 25 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியத் தாக்குதலில் 2 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அரசு நிலைகளின் மீதான தாக்குதல்கள் நிறைவடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்த போதும் இன்று மீண்டும் ஈரான் குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், பல்கலைக்கழகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தலைநகரான தெஹ்ரானில் சில பகுதிகளுக்கு எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் ஈரான் திறக்காவிட்டால் அவர்களை நரகத்திற்கு அனுப்புவதாக எச்சரித்த நிலையில், அவரது மிரட்டலை நிராகரிக்கும் விதமாக பிராந்தியம் முழுவதும் பேரழிவு ஏற்படும் என்று ஈரான் பதிலளித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஈரான் செய்தித் தொடர்பாளர், “பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் எங்களின் அடுத்தகட்ட தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகளால் மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரும்” என்று எச்சரித்துள்ளார்.
Summary
US-Israeli strikes on Iran cities kill at least 25 as Tehran rejects Trump's deadline
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருக்கி மீது மீண்டும் ஈரான் தாக்குதல்!

லெபனானில் இஸ்ரேல் தொடா் தாக்குதல்: மேலும் 12 போ் உயிரிழப்பு
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

லெபனான் மீது இஸ்ரேஸ் தீவிர தாக்குதல்: 31 பேர் பலி, 149 பேர் காயம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


