வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

அமெரிக்கா - ஈரான் இடையே 45 நாள்கள் போர்நிறுத்த அறிவிப்பு?

45 நாள்கள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

ஈரானில் அரசுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட பெண்கள். - AP

Updated On :6 ஏப்ரல் 2026, 6:38 am

45 நாள்கள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 முதல் போர் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஈரானும் அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், அதனைத் திறக்காவிட்டால் ஈரானை நரகத்திற்கு அனுப்புவேன் என இரு நாள்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதில் 45 நாள்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்ஸியோஸ் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தொடர்ந்து வரும் மோதல்களுக்கு நீண்டகால தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட அந்தப் பகுதியில் உள்ள வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஆகியோர் மறைமுக செய்தி பரிமாற்றங்கள் வழியே தகவல் தொடர்பு மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரு தரப்பிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

காஸா மற்றும் லெபனானில் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தாக்குதல்கள் நடப்பதைப் போன்ற நிலைமையைத் தவிர்க்க விரும்புவதாக மத்தியஸ்தம் செய்த நாடுகளிடம் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

US, Iran explore 45-days ceasefire proposal: Report

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.