திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்

தெஹ்ரான் - வாஷிங்டன் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது குறித்து...

News image

போருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் - ஏபி

Updated On :23 மார்ச் 2026, 12:51 pm

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெஹ்ரான் - வாஷிங்டன் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

எரிபொருள் விலையைக் குறைப்பதையும், ராணுவ திட்டங்களை செயல்படுத்துவதையுமே அமெரிக்க அதிபரின் கருத்து நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2 நாள்களாக ஈரான் - அமெரிக்கா இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவு மற்றும் அதனால் ஏற்பட்ட நம்பகத்தன்மை காரணமாக ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் 5 நாள்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார். இதனிடையே தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அதிபர் டிரம்ப் கூறியதை ஈரான் மறுத்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தாக்குதல் பல்வேறு வகையில் நடத்தி வருகின்றன. இதில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உள்ளிட்ட ராணுட மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் பலியாகினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணை வழியே அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வணிகக் கப்பல்கள் செல்ல ஈரான் தடை விதித்தது. இதனால் பிரிட்டனின் உதவியுடன் அந்நாட்டு ராணுவத்துக்குச் சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அரபிக் கடலில் அமெரிக்கா நிலை நிறுத்தியது.

இதனிடையே நேற்று அமெரிக்காவுக்குச் சொந்தமான எப்-15 ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனை ஈரான் வெளிப்படையாக விடியோ வெளியிட்டு அறிவித்தது.

Summary

No dialogue between Tehran and Washington: Iran media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.