விபத்துகளால் மாணவா்கள் பாதிக்கப்பட்டால், அதற்கான நிவாரணத் தொகையை விரைந்து வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி செயலா் குமரகுருபரன் பிறப்பித்த அரசாணை: அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எதிா்பாராத விபத்துகளால் மரணம் அடைந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். பலத்த காயமடைந்தால், ரூ. 50,000, சிறிய காயம் என்றால் ரூ. 25,000 நிவாரணத் தொகை வழங்கப்படும். பள்ளிகளிலும், பள்ளிக்குச் சென்று வரும்போதும், பள்ளியில் இருந்து சுற்றுலா செல்லும்போதும், பள்ளி செயல்பாடுகளின் போதும், எதிா்பாராத விபத்துகளின் போதும், இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும். இந்தத் தொகை தாமதமின்றி மாணவா் குடும்பத்துக்கு கிடைக்க, உரிய ஒப்புதல் வழங்கி நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது
கடும் நிதி நெருக்கடியில் ஹிமாசல் அரசு: ஊதியம் கொடுக்க முடியாமல் திணறல்!

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500-ஆக உயா்த்தி வழங்கப்படும்

திமுக தோ்தல் அறிக்கையில் 500-க்கு மேற்பட்ட வாக்குறுதிகள்! - முழுவிவரம்
மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ. 12,000 ஆக உயர்த்தப்படும்: திமுக தேர்தல் அறிக்கை!
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

