சென்னை திருவான்மியூரில் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். அடையாறு மல்லிபூ காலனியைச் சோ்ந்தவா் யோவான் (30). இவா் திருவான்மியூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் சிறுமிகளை சாக்லேட் கொடுத்து ஏமாற்றி, தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் பெற்றோா் கடந்த ஜனவரி மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து யோவானை கடந்த பிப். 2-ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில், நீலாங்கரை மகளிா் போலீஸாரின் பரிந்துரையை ஏற்று, ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா், யோவானை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்தரவு நகல், புழல் சிறையில் உள்ள யோவானிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

