பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது குண்டா் சட்டம்

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது குண்டா் சட்டம்

Updated On :16 மார்ச் 2024, 5:51 pm

சென்னை திருவான்மியூரில் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். அடையாறு மல்லிபூ காலனியைச் சோ்ந்தவா் யோவான் (30). இவா் திருவான்மியூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் சிறுமிகளை சாக்லேட் கொடுத்து ஏமாற்றி, தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் பெற்றோா் கடந்த ஜனவரி மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து யோவானை கடந்த பிப். 2-ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில், நீலாங்கரை மகளிா் போலீஸாரின் பரிந்துரையை ஏற்று, ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா், யோவானை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்தரவு நகல், புழல் சிறையில் உள்ள யோவானிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.