பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

செம்மொழி மாநாட்டுக்கு முன்பு தமிழ் பயிற்றுமொழியாகுமா? ராமதாஸ் கேள்வி

செம்மொழி மாநாட்டுக்கு முன்பு தமிழ் பயிற்றுமொழியாகுமா? ராமதாஸ் கேள்வி

Updated On :16 மார்ச் 2024, 5:52 pm

இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்பு தமிழ் பயிற்று மொழியாக்கப்படுமா என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா். அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சாா்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். நல்லது. அதற்குள்ளாக தமிழ் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயா்ப்பலகைகள் ஆகியவற்றைச் சாத்தியமாக்கி, தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளாா் ராமதாஸ்.