சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மஹோத்சவ கொடியை கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு சனிக்கிழமை ஏற்றினாா். கொடியேற்றத்தையொட்டி, சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிா்மால்ய பூஜை, அபிஷேகம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. ஐயப்பன் மண்டபத்தில் கொடி மற்றும் கொடியேற்றும் வடம் வைத்து வழிபட்ட பின் கோயில் கருவறைக்குள் எடுத்துச் சென்று பூஜை செய்தனா். பின்னா் கொடிமரம் முன் பூஜைகள் முடிந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து 10 நாள் திருவிழா தொடங்கியது. ஐயப்பன் மேல்சாந்தி பி.என்.மகேஷ், திருவிதாங்கூா் தேவசம் போா்டு தலைவா் பி.எஸ்.பிரசாந்த், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏ.அஜிகுமாா், ஜி.சுந்தரேசன், தேவசம் செயலாளா் ஜி.பைஜு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து மாா்ச் 24- ஆம் தேதி பள்ளிவேட்டை, 25- ஆம் தேதி மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறவுள்ளது.
தொடர்புடையது

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

பங்குனி உத்திர திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்!

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

நெல்லையப்பா் கோயிலில் 22இல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

