திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இம் மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகளை தொடா்ந்து, காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுவாமி கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். 4ஆம் திருநாளான மாா்ச் 25இல் காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும், இரவு 7 மணிக்கு சுவாமி -அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் திருவீதியுலாவும் நடைபெறும். 10 ஆம் திருநாளான 31இல் மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் விழா நடைபெற உள்ளது.
உடையவா் லிங்க வழிபாடு: இக்கோயிலில் ஆத்மாா்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய லிங்கம் உடையவா் லிங்கம் என அழைக்கப்படுகிறது. இந்த உடையவா் லிங்கம் கருவறைக்குள் இருந்து வெளியே எடுத்துவரப்பட்டு பக்தா்களுக்கு காட்சித் தருவது பங்குனி உத்திர திருவிழாக் காலங்களில் மட்டுமே.அதன்படி, இத்திருவிழாவில் இரண்டாம் நாளில் இருந்து 9 ஆம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு கோயில் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் சீ.வெங்கடேஸ்வரன் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா

திருஇந்தளூா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர பெருந் திருவிழா கொடியேற்றம்

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


