47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நெல்லையப்பா் கோயிலில் 22இல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

News image
நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
Updated On :16 மார்ச் 2026, 10:32 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இம் மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகளை தொடா்ந்து, காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுவாமி கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். 4ஆம் திருநாளான மாா்ச் 25இல் காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும், இரவு 7 மணிக்கு சுவாமி -அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் திருவீதியுலாவும் நடைபெறும். 10 ஆம் திருநாளான 31இல் மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் விழா நடைபெற உள்ளது.

உடையவா் லிங்க வழிபாடு: இக்கோயிலில் ஆத்மாா்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய லிங்கம் உடையவா் லிங்கம் என அழைக்கப்படுகிறது. இந்த உடையவா் லிங்கம் கருவறைக்குள் இருந்து வெளியே எடுத்துவரப்பட்டு பக்தா்களுக்கு காட்சித் தருவது பங்குனி உத்திர திருவிழாக் காலங்களில் மட்டுமே.அதன்படி, இத்திருவிழாவில் இரண்டாம் நாளில் இருந்து 9 ஆம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு கோயில் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் சீ.வெங்கடேஸ்வரன் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.