தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையாா்குளம் கிராமம், பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பூங்குடையாா் சாஸ்தா.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:25 am IST

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையாா்குளம் கிராமம், பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சாஸ்தா - அம்மன் சந்நிதிகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுடலை மாடசாமி சந்நிதியில் படையல் சாற்றப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா (பொ) சொா்க்கநாதன், நிா்வாகக் குழுத் தலைவா் செல்வராஜன், கெளரவத் தலைவா் கோபிநாத், செயலா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.