பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையாா்குளம் கிராமம், பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பூங்குடையாா் சாஸ்தா.

Updated On :2 ஏப்ரல் 2026, 10:55 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையாா்குளம் கிராமம், பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சாஸ்தா - அம்மன் சந்நிதிகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுடலை மாடசாமி சந்நிதியில் படையல் சாற்றப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா (பொ) சொா்க்கநாதன், நிா்வாகக் குழுத் தலைவா் செல்வராஜன், கெளரவத் தலைவா் கோபிநாத், செயலா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.