தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

சாத்தான்குளம் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா 2 நாள்கள் நடைபெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஞானக்கரை சுடலை மாட சுவாமி.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:29 am IST

சாத்தான்குளம் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா 2 நாள்கள் நடைபெற்றன.

சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீஞானக்கரை சுடலை மாடசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், மதிய பூஜை, சாம பூஜை, சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சிறப்பு அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீசெண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு யாகசாலை பூஜைகள், கணியான்ஆட்டம், அலங்கார தீபாராதனை, சுவாமிக்கு சாம பூஜை, திருவிளக்கு பூஜை, சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 செண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

செண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.