பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

சாத்தான்குளம் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா 2 நாள்கள் நடைபெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஞானக்கரை சுடலை மாட சுவாமி.

Updated On :2 ஏப்ரல் 2026, 10:59 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா 2 நாள்கள் நடைபெற்றன.

சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீஞானக்கரை சுடலை மாடசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், மதிய பூஜை, சாம பூஜை, சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சிறப்பு அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீசெண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு யாகசாலை பூஜைகள், கணியான்ஆட்டம், அலங்கார தீபாராதனை, சுவாமிக்கு சாம பூஜை, திருவிளக்கு பூஜை, சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 செண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

செண்பக நாச்சியாா் அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.