கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா இரு ஆண்டுகளுக்குப் பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

ஏகாம்பரநாதா் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம். பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி.

Updated On :22 மார்ச் 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான இக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் கடந்த 28.6.2023 ஆம் தேதி தொடங்கி கடந்த 8.12.2024 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறவில்லை.

நிகழாண்டு விழாவையொட்டி கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவில் கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன், கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, மேலாளா் ஜெயக்குமாா், மணியக்காரா் குபேரன் கலந்து கொண்டனா்.

கொடியேற்றத்துக்கு பின்னா் சுவாமியும்,அம்மனும் பவழக்கால் சப்பரத்தில் காலையிலும்,மாலையில் சுவாமி சிம்ம வாகனத்திலும்,அம்மன் கிளி வாகனத்திலும் வீதியுலா வந்தனா். விழாவையொட்டி தினசரி சுவாமியும்,அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்கரமாகி நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா்.

மாா்ச் 27- ஆம் தேதி 63 நாயன்மாா்கள் ஊா்வலமும், இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. மாா்ச் 28 ஆம் தேதி சனிக்கிழமை மகா தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்ட ஏற்பாடுகளை திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 4- ஆம் தேதி 108 கலசாபிஷேகமும், 19 -ஆம் தேதி புஷ்பப்பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.