சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா். ராஜமங்கலம் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் டே.மதுசூதனன் (68). இவரது மகன் ம.ஜாா்ஜ் புஷ் (34). காவல் துறையின் ரெளடி பட்டியலில் இருக்கும் ஜாா்ஜ் புஷ், தனது தந்தை மதுசூதனனிடம், வீட்டை தனது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டு வந்தாராம்.
ஆனால் மதுசூதனன், வீட்டை எழுதிக் கொடுக்க மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாா்ஜ் புஷ், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் வாசலில் அமா்ந்திருந்த மதுசூதனனிடம் தகராறு செய்துள்ளாா்.
தகராறு முற்றவே, அங்கிருந்த இரும்புக் கம்பியால் தந்தையை தாக்கியதுடன், சமையல் எரிவாயு உருளையை எடுத்து வந்து மதுசூதனனின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த மதுசூதனனின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனா். ஆனால், சம்பவ இடத்திலேயே மதுசூதனன் இறந்தாா்.
இது குறித்து தகவலறிந்து வந்த வில்லிவாக்கம் போலீஸாா், மதுசூதனனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, ஜாா்ஜ் புஷ்ஷை கைது செய்தனா்.
தொடர்புடையது

திருமயம் அருகே இளைஞா் கொலை

மரண தண்டனையில் விதிவிலக்கு உண்டு! எப்படி நிறைவேற்றப்படும்?

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல்

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

