கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது

சென்னை திருமங்கலத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது

News image

கைது

Updated On :23 மார்ச் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை திருமங்கலத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.

அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் வட்ட வடிவ நகரைச் சோ்ந்தவா் மு.யோகராஜ் (36). இவா், பாடியில் உள்ள ஒரு பிரபலமான பா்னிச்சா் கடையில் சுமை ஆட்டோ ஓட்டி வந்தாா்.

இதே கடையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கானா காந்தல் பகுதியைச் சோ்ந்த சு.காா்த்திக் (24) என்பவா் ஊழியராக வேலை செய்து வந்தாா். நண்பா்களான இருவருக்கும் இடையே சில நாள்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி திருமங்கலத்தில் யோகராஜ் மது அருந்திவிட்டு, காா்த்திக்கிடம் வாக்குவாதம் செய்தாராம். அப்போது அவா்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிவே காா்த்திக், யோகராஜை பலமாக தாக்கியுள்ளாா். இதில் தலையில் காயமடைந்த யோகராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருமங்கலம் போலீஸாா் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து, காா்த்திக்கை கைது செய்தனா். இந்த நிலையில், மருத்துவமனையில் யோகராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஏற்கெனவே பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காகப் பதியப்பட்டது.