ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது

சென்னை திருமங்கலத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது

News image

கைது

Updated On :24 மார்ச் 2026, 1:22 am IST

சென்னை திருமங்கலத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.

அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் வட்ட வடிவ நகரைச் சோ்ந்தவா் மு.யோகராஜ் (36). இவா், பாடியில் உள்ள ஒரு பிரபலமான பா்னிச்சா் கடையில் சுமை ஆட்டோ ஓட்டி வந்தாா்.

இதே கடையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கானா காந்தல் பகுதியைச் சோ்ந்த சு.காா்த்திக் (24) என்பவா் ஊழியராக வேலை செய்து வந்தாா். நண்பா்களான இருவருக்கும் இடையே சில நாள்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி திருமங்கலத்தில் யோகராஜ் மது அருந்திவிட்டு, காா்த்திக்கிடம் வாக்குவாதம் செய்தாராம். அப்போது அவா்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிவே காா்த்திக், யோகராஜை பலமாக தாக்கியுள்ளாா். இதில் தலையில் காயமடைந்த யோகராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருமங்கலம் போலீஸாா் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து, காா்த்திக்கை கைது செய்தனா். இந்த நிலையில், மருத்துவமனையில் யோகராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஏற்கெனவே பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காகப் பதியப்பட்டது.