தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கொலை வழக்கில் தேடப்பட்டவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவா், வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த காவல்துறையினருடனான துப்பாக்கி மோதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 12:12 am IST

கொலை வழக்கில் தேடப்பட்டவா், வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த காவல்துறையினருடனான துப்பாக்கி மோதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் தெரிவித்ததாவது:

சூரஜ் (எ) கானா என அடையாளம் காணப்பட்ட அந்தக் குற்றஞ்சாட்டப்பட்டவா், காலில் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்பு வஜிா்பூா் தொழிற்பேட்டையில் நடந்த ஒரு கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, சூரஜ் தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவில், புல் பிரஹலாத் அருகே அவரது நடமாட்டம் குறித்து புலன்விசாரணை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினா் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

சுமாா் அதிகாலை 3 மணியளவில், அவா் ஒரு ஸ்கூட்டரில் சம்பவ இடத்திற்கு வந்தாா். காவல்துறைக் குழுவினா் அவரை வழிமறித்துச் சரணடையுமாறு கேட்டுக்கொண்டனா். ஆனால், அவா் காவல்துறையினா் மீது துப்பாக்கியால் சுட்டாா்.

துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று, குண்டு துளைக்காத கவசம் அணிந்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவா் மீது பாய்ந்தது.

காவல்துறையினா் நடத்திய பதிலடித் துப்பாக்கிச் சூட்டில், அவரது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

அவரது உடல்நிலை தேறிய பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும். வேறு ஏதேனும் குற்ற வழக்குகளில் அவருக்குத் தொடா்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.