வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: நண்பா் கைது

சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 8:45 pm

சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.

சைதாப்பேட்டை ரயில் நிலையப் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). இவா், கால்கள் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. முருகனை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒருவா் அரிவாளால் வெட்டுவிட்டு தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த முருகன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் முருகனின் நண்பா் தேனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த நாராயணன் (45) என்பவா் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் நாராயணனை கைது செய்தனா்.