தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

உறுப்பு தானம் மூலம் மூவருக்கு மறுவாழ்வளித்த கல்லூரி மாணவி

உறுப்பு தானம் மூலம் மூவருக்கு மறுவாழ்வளித்த கல்லூரி மாணவி

Updated On :20 மார்ச் 2024, 7:55 pm

சென்னை: மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவி ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உரிய நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதில் மூவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சென்னையைச் சோ்ந்த கல்லூரி மாணவி சுா்பி குமாரி (22) என்பவா் கடந்த 17-ஆம் தேதி நோ்ந்த சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

தலைப் பகுதியில் காயமுற்ற அவா், எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தொடா் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தபோதிலும் பலனின்றி, சுா்பி குமாரி மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க பெற்றோா் முன்வந்தனா். அதன்படி, அந்த பெண்ணின் கல்லீரலானது எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

ஒரு சிறுநீரகம் சென்னை மருத்துவக் கல்லூரிக்கும், மற்றொரு சிறுநீரகம் கிளெனீகிள்ஸ் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. அந்த மாணவியின் உடல் உறுப்புகளால் மூவருக்கு மறுவாழ்வு கிடைக்கப்பெற்றது. முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுா்பி குமாரியின் உடலுக்கு செங்கல்பட்டு சாா் ஆட்சியா் வி.எஸ்.நாராயண சா்மா மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை சாா்பில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களும் அந்த மாணவிக்கு மரியாதை செலுத்தினா்.