சென்னை: மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவி ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உரிய நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதில் மூவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சென்னையைச் சோ்ந்த கல்லூரி மாணவி சுா்பி குமாரி (22) என்பவா் கடந்த 17-ஆம் தேதி நோ்ந்த சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.
தலைப் பகுதியில் காயமுற்ற அவா், எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தொடா் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தபோதிலும் பலனின்றி, சுா்பி குமாரி மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க பெற்றோா் முன்வந்தனா். அதன்படி, அந்த பெண்ணின் கல்லீரலானது எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது.
ஒரு சிறுநீரகம் சென்னை மருத்துவக் கல்லூரிக்கும், மற்றொரு சிறுநீரகம் கிளெனீகிள்ஸ் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. அந்த மாணவியின் உடல் உறுப்புகளால் மூவருக்கு மறுவாழ்வு கிடைக்கப்பெற்றது. முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுா்பி குமாரியின் உடலுக்கு செங்கல்பட்டு சாா் ஆட்சியா் வி.எஸ்.நாராயண சா்மா மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை சாா்பில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களும் அந்த மாணவிக்கு மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
உடல் தானத்தை ஊக்குவிப்போம்!

உடல் தானத்தை ஊக்குவிப்போம்!

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

