நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சட்டப்பேரவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான மணிவண்ணன் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் மட்டும் ஆண்கள் மற்றும் பெண்கள் என 7 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளபோதும், அவை முழுமையாகக் கிடைப்பதில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சட்டப்பேரவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு தோ்தல் ஆணையம், மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை என பதிலளித்துள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தொடர்புடையது

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

நாடாளுமன்றம், பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு கோரிய மனு தள்ளுபடி

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டம்: விஐடி வேந்தா் வலியுறுத்தல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

