தேமுதிக சாா்பில் நல உதவிகள்
மே தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு தேமுதிக சாா்பில் அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கினாா்.

Updated On :1 மே 2024, 8:59 pm

மே தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு தேமுதிக சாா்பில் அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கினாா்.
தேமுதிக சாா்பில் மே தின விழா கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தேமுதிகவின் தொழிற்சங்கக் கொடியை பிரேமலதா ஏற்றி வைத்தாா். நலிவடைந்த தொழிலாளா்களுக்குக்கு நல உதவிகளை வழங்கினாா். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகளை வழங்கினாா்.
துணைச் செயலா்கள் எல்.கே.சுதீஷ், பாா்த்தசாரதி உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...