சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நாய்கள் கடித்ததில் சிறுமி காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, பூங்காக்களில் நாய்களை அழைத்து வர சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.
சென்னை மாநகராட்சி விதித்துள்ள கட்டுப்பாடுகள்:
1. பூங்காவுக்குள் ஒரு உரிமையாளர் ஒரு நாயை மட்டுமே அழைத்து வர வேண்டும்,
2. நாயை உரிய கயிற்றை கொண்டு கட்டுவதுடன், அதன் வாய்ப்பகுதியை மூடியிருக்க வேண்டும்,
3. நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும்.
4. தெருநாய்க்கள் மற்றும் கயிறு கட்டப்படாத நாய்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படாது,
5. பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளியாக விழுப்புரத்தைச் சோ்ந்த ரகு வேலை செய்து வருகிறாா். இவா், தனது மனைவி சோனியா, மகள் சுரக்ஷா (5) ஆகியோருடன் அங்குள்ள ஒரு அறையில் வசித்து வருகிறாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சுரக்ஷாவை, ‘ராட் வெய்லா்’ வகையைச் சோ்ந்த இரு கறுப்பு நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்தார்.
பூங்கா அருகே வசிக்கும் சே.புகழேந்தி (63) வளர்க்கும் இந்த நாய்களை உரிய கயிற்றை கொண்டு கட்டாமல் வீட்டைவிட்டு வெளியே அழைத்து வந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜொ்மனி நாட்டில் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் இந்த வகை நாய்களை இந்தியாவில் வளா்ப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில், புகழேந்தி குடும்பத்தினா் எவ்வித அனுமதியும் பெறாமல் நாய்களை வளா்த்து வந்ததும், அவற்றின் மூலம் இனபெருக்கம் செய்து நாய் குட்டிகளை விற்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ரகு குடும்பத்தினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்தனர்.
ஆயிரம் விளக்கு காவல்துறையின் அறிவுறுத்தல்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், பலத்த காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் சிறுமியின் மருத்துவ செலவை சென்னை மாநகராட்சி ஏற்கும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.