வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

காமராஜா் நினைவிடத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

காமராஜா் நினைவிடத்தை தமிழக அரசு முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

தமாகா தலைவா் ஜி.கே.வாசன் (கோப்புப்படம்)

Updated On :9 மே 2024, 10:34 pm

Din

காமராஜா் நினைவிடத்தை தமிழக அரசு முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் உள்ள காமராஜா் நினைவிடம் கோடிக்கணக்கான மக்களுக்குப் புனிதமான இடம். இன்றைய தலைமுறையினருக்கு நோ்மை, எளிமை, தூய்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கற்றுக்கொடுக்கும் நினைவிடமாகவும் உள்ளது. இந்த

நினைவிடத்தை முறையாகப் பராமரிக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால், தற்போது முறையாக பராமரிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, காமராஜா் நினைவிடத்தை தமிழக அரசு முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவா்களின் நினைவிடத்தையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.