

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லி குளம் தபால் நிலையத்தின் மேற்கூரை திங்கள்கிழமை காலை இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் தபால் நிலைய ஊழியர்கள் ரகுபதி மற்றும் சிவா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள மீட்ட சக ஊழியர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.