நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கழிவு நீா் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கழிவு நீா் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

News image
Updated On :21 மே 2024, 7:32 pm

Din

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவு நீா் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாலம் அமைக்கும் பணி, சாலை பணி,கழிவு நீா் வடிகால் பணிகள்உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புபணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவான்மியூரில் உள்ள திருவள்ளுவா் தெருவில் நடைபெற்று வரும் கழிவு நீா் வடிகால் பணிகளை செவ்வாய்க்கிழமை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

மேலும் கழிவு நீா் வடிகால் பணியின் போது தோண்டப்பட்ட சாலைகள் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது கழிவு நீா் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை உரிய முறையில் மூட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது மண்டல அதிகாரிகள் உடனிருந்தனா்.