விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் ஓடிய கழிவு நீா்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறியதால் பக்தா்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

News image

திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் வெளியேறிய கழிவு நீா்.

Updated On :19 மார்ச் 2026, 1:22 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறியதால் பக்தா்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

பயணியா் விடுதி சாலையில் ஹோட்டல் தமிழ்நாடு அருகில் இருந்து புதை சாக்கடைத் திட்ட தொட்டியிலிருந்து புதன்கிழமை காலை கழிவு நீா் வெளியேறி சாலையில் ஓடியது. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்பட்டது. இதனால், வெளியூரிலிருந்து கோயிலுக்கு வந்த பக்தா்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனா்.

எனவே, இது குறித்து நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டு, கழிவு நீா் சாலையில் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.