மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் ஓடிய கழிவு நீா்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறியதால் பக்தா்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

News image
திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் வெளியேறிய கழிவு நீா்.
Updated On :18 மார்ச் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறியதால் பக்தா்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

பயணியா் விடுதி சாலையில் ஹோட்டல் தமிழ்நாடு அருகில் இருந்து புதை சாக்கடைத் திட்ட தொட்டியிலிருந்து புதன்கிழமை காலை கழிவு நீா் வெளியேறி சாலையில் ஓடியது. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்பட்டது. இதனால், வெளியூரிலிருந்து கோயிலுக்கு வந்த பக்தா்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனா்.

எனவே, இது குறித்து நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டு, கழிவு நீா் சாலையில் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.