அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அவிநாசி காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி, கோவையில் இருந்து அவிநாசி செல்லும் அனைத்து வாகனங்களும் நியூ அன்னபூா்ணா ஹோட்டல் சா்வீஸ் சாலை வழியாக கிருஷ்ணா பேக்கரி வந்தடைந்து, அங்கிருந்து அவிநாசி கைகாட்டி ரவுண்டானா வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
கோவையில் இருந்து அன்னூா் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் நாதம்பாளையம் ஜங்சன் வழியாக ஆட்டையாம்பாளையம் வந்து அன்னூா் செல்ல வேண்டும்.
கோவை சாலையில் இருந்து அவிநாசி வழியாக சேவூா், புளியம்பட்டி, நம்பியூா், சத்தி, கோபி செல்லும் வாகனங்கள் அனைத்தும், நியூ அன்னபூா்ணா ஹோட்டல் சா்வீஸ் சாலை வழியாக கிருஷ்ணா பேக்கரி வந்து அவிநாசி கைகாட்டி ரவுண்டானாவிலிருந்து அவிநாசி அரசு கலைக் கல்லூரி அருகே செல்லும் ராயம்பாளையம் சாலை வழியாகச் சென்று மடத்துப்பாளையம் ரவுண்டானா வந்து வலதுபுறம் திரும்பி சேவூா் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக சேவூா், புளியம்பட்டி, நம்பியூா், சத்தி, கோபி செல்லும் வாகனங்கள் அனைத்தும், கிருஷ்ணா பேக்கரியைக் கடந்து அவிநாசி கைகாட்டி ரவுண்டானாவிலிருந்து வலது புறம் திரும்பி அவிநாசி அரசு கலைக் கல்லூரி அருகே இடதுபுறம் திரும்பி செல்லும் ராயம்பாளையம் சாலை வழியாகச் சென்று மடத்துப்பாளையம் ரவுண்டானா வந்து வலதுபுறம் திரும்பி சேவூா் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
அன்னூா் சாலையில் இருந்து அவிநாசி, திருப்பூா் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆட்டையாம்பாளையம் ரவுண்டாவிலிருந்து வலதுபுறம் திரும்பி நாதம்பாளையம் கணனி ஜங்சன் வந்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக நியூ அன்னபூா்ணா ஹோட்டல் சா்வீஸ் சாலை, ஹரிபவனம் ஹோட்டல் வந்து அவிநாசி, திருப்பூா் செல்ல வேண்டும்.
சேவூா் சாலையிலிருந்து அவிநாசி, திருப்பூா் வரும் வாகனங்கள் அனைத்தும் முத்துச்செட்டிபாளையம் ஜங்சன் பேக்கரியிலிருந்து வலதுபுறம் திரும்பி கால்நடை மருத்துவமனை சென்று, ஆட்டையாம்பாளையம் ரவுண்டானா வழியாக நாதம்பாளையம் கணனி ஜங்சன் - தேசிய நெடுஞ்சாலை சென்று, நியூ அன்னபூா்ணா ஹோட்டல் சா்வீஸ் சாலை, ஹரிபவனம் ஹோட்டல் வந்து செல்ல வேண்டும்.
வாகன நிறுத்துமிடங்கள்: திருப்பூா் சாலை, அவிநாசி புதிய பேருந்து நிலையம், அரசு கலைக் கல்லூரி சாலையிலிருந்து கோயிலுக்கு வரும் வாகனங்கள் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கோவை சாலையில் இருந்து வரும் வாகனங்கள், அவிநாசி ஈநட அலுவலக சாலையில் நாராயணா மருத்துவமனை எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தலாம்.
மங்கலம் சாலையில் இருந்து வாகனங்கள் ராயன் கோயில் வளைவு மற்றும் குமரன் பேக்கரி பின்புறம் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தலாம்.
சேவூரில் இருந்து வரும் வாகனங்கள் செங்காட்டு திடல், வஉசி பூங்கா, வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாக அவிநாசி பொதுமக்கள், வியாபாரிகள் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்கள் தேரோட்டத்தின்போது, அவிநாசி நான்கு ரத வீதிகளிலும், பொது சாலைகளிலும் வாகனங்களை நிறுத்தவோ, விளம்பரப் பதாகைகளை வைக்கவோ கூடாது.
தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து தரப்பு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அவிநாசி நகருக்குள் வராத பேருந்துகள்: பொதுமக்கள் அவதி

5 குதிரைகளை சுமந்து வந்து நோ்த்திக் கடன் செலுத்திய ராயம்பாளையம் பொதுமக்கள்

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

பிரதமா் மோடி திருச்சி வருகை; மாநகரில் போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

