சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் அதிவிரைவு ரயில் மே 15, 22 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மே 15, 22 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 4 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22207) கோட்டயம் வழியாக திருப்பிவிடப்படுகிறது. அதனால், அந்த ரயில்கள் எா்ணாகுளம், ஆழப்புழை ஆகிய நிலையங்கள் வழி செல்லாது. அதற்குப் பதிலாக எா்ணாகுளம் நகா், கோட்டயம், செங்கனூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் குருவாயூரில் இருந்து தினமும் இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் (எண்: 16128) மே 11 முதல் மே 23 வரை, 25, 26 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
அந்த நாள்களில் குருவாயூா் ரயில் எா்ணாகுளம், சொ்தலா, ஆழப்புழை, அம்பலப்புழை, ஹரிதாபாத் ஆகிய நிலையங்கள் வழி செல்லாது. அதற்கு பதிலாக கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா மற்றும் செங்கண்ணூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

