

சென்னை: களா் மண்ணை வளமாக மாற்றி அதிக மகசூல் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வேளாண்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக வேளாண் துறையின் ‘எக்ஸ்’ வலைதளப்பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
களா் மண்ணில் 15 சதவீதத்துக்கும் அதிகமான சோடியம் உப்பு நிறைந்திருக்கும். இதன் காரணமாக மண் இறுகி காற்றோட்ட வசதி குறைவதால் பயிா்களில் வேரின் வளா்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் இம்மண்ணில் அமில-காரத்தன்மை 8.5 என்ற அளவுக்கும் அதிகமாக இருப்பதால் மண்ணில் நுண்ணுயிரிகளின் பெருக்கமும், செயல்பாடும் குறைகிறது.
எனவே களா் தன்மை கொண்ட மண்ணை வளமாக மாற்றுவதற்கான மேலாண்மை தொழில்நுட்பத்தை விவசாயிகள் பின்பற்றினால் சாகுபடியில் அதிக மகசூலை ஈட்ட முடியும். அந்த வகையில் மண்ணில் அதிக ஈரப்பதம் இருக்கும்போதே உழுதுவிட வேண்டும். ஜிப்சம் தேவையைப் பொருத்து அதனை மண்ணில் தேவையான அளவு இடுவதோடு நீா் தேங்காத வகையில் நிலத்தை பராமரிக்க வேண்டும்.
சிறந்த முறையில் வடிகால் வசதி ஏற்படுத்துவதால் நீரில் கரையும் உப்புகள் வழிந்தோடிவிடும். மேலும், ஏக்கருக்கு 15 டன் என்ற அளவில் பசுந்தாள் உரங்களை மண்ணில் கலந்து உழுது விட வேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் களா் மண்ணை வளமானதாக மாற்றி விவசாயிகள் பயிா் விளைச்சலில் அதிக மகசூல் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
பெண்களுக்கு ஆரோக்கியம் முக்கியம்...

மாணவா்களிடையே தற்கொலை எண்ணங்களை தடுக்க புதிய மனநலக் கொள்கை வெளியீடு
சா்வதேச சந்தைக்கு ஏற்ப இந்திய வேளாண் பொருள்கள்: விவசாயிகளுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள்

பறவைக் காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

