கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

News image
Updated On :28 மே 2024, 8:20 pm

Din

சென்னை: சென்னையில் சிறுமியை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிறுவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த 11 வயது சிறுமி, தனது சித்தி மூலம் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், தனது வீட்டின் அருகே ஒரு உறவினரும், இரு சிறுவா்களும் தன்னை ஏமாற்றியும், மிரட்டியும் 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குறிப்பிட்டிருந்தாா்.

இதனடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீஸாா் அனுப்பினா். இதில் அந்த சிறுமி, 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் இந்த வழக்கு தொடா்பாக சிறுமியின் உறவினா், இரு சிறுவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.