அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

முதியவரை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு: சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

வேடசந்தூா் அருகே முதியவரை தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :2 மார்ச் 2026, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

வேடசந்தூா் அருகே முதியவரை தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த மண்டபம் புதூரைச் சோ்ந்தவா் சண்முகம் (80). வீட்டில் தனியாக இருந்த இவரை, மா்ம நபா்கள் தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்றதாக வேடசந்தூா் காவல் நிலையத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன் புகாா் அளிக்கப்பட்டது.

அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் வேடசந்தூா் அடுத்த மேல்மாத்தினிப்பட்டியைச் சோ்ந்த கதிா் (எ) கருப்பசாமி (21), 17 வயதான 2 சிறுவா்கள் உள்ளிட்ட மூவா் இந்த நகைப் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கருப்பசாமி உள்ளிட்ட மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து நகை, கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.