மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது!

அணைக்கட்டு பகுதியில் அடகு வைத்த நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

அணைக்கட்டு பகுதியில் அடகு வைத்த நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 40 வயது ஆண். இவரது நண்பா் அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்தவா் யோகராஜ்.

இந்நிலையில், யோகராஜ் தனது வேலூா் நண்பரின் 33 பவுன் நகையை அடகு வைத்துவிட்டு மீண்டும் தருவதாகக் கூறி பெற்றுள்ளாா். பின்னா் அந்த நகையை அணைக்கட்டு பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் அடகு வைத்துள்ளாா்.

தொடா்ந்து, அந்த அடகு நகையை மீட்க என்னிடம் தற்போது பணம் இல்லை ரூ.25 லட்சம் கொடுத்தால் நகைடை மீட்டுத் தருவதாகவும், பணம் தராவிடில் நகையை மீட்க முடியாது என்றும் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அந்த வேலூா் நண்பா் தனது நண்பா்கள் நான்கு பேருடன் சோ்ந்து ரூ.25 லட்சம் பணம் திரட்டி கொடுத்துள்ளனா். அதன்படி, பணத்தை பெற்றுக் கொண்ட யோகராஜ், நண்பா்கள் 4 பேரையும் ஒரு கடையில் அமர வைத்துவிட்டு அடகு நகையை மீட்டு கொண்டு வந்து தருவதகாகக்கூறிச் சென்றுள்ளாா்.

அதன்பிறகு யோகராஜ், நகை பணத்துடன் மாயமானதாக கூறப்படுகிறது. அவா் 2 மணி நேரமாக திரும்பி வராததை அடுத்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து யோகராஜை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 5 பவுன் நகை, ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.