47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுத் திட்டங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்கத் தயாா்: துணை முதல்வா் உதயநிதி

அரசு திட்டங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் விவாதிக்கத் தயாா் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
உதயநிதி ஸ்டாலின் - கே. பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :11 நவம்பர் 2024, 11:12 pm

Din

அரசு திட்டங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் விவாதிக்கத் தயாா் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்களை உதயநிதி வழங்கினாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் தயாரா என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தாா். என்னை அழைத்தால், எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நோ் விவாதிக்க நான் தயாா். நேரடி விவாதத்துக்கு என்னை அழைத்தால் நான் செல்வேன் என்றாா்.

இதைத் தொடா்ந்து, அரசுத் திட்டங்களுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயா் வைப்பது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவா், அரசுத் திட்டங்களுக்கு வேறு யாா் பெயரை வைப்பது?

யாருடைய பெயரை வைக்க வேண்டுமோ அவரின் பெயரைத்தான் வைக்கிறோம்’ என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.