ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

திருப்பத்தூருக்கு துணை முதல்வா் இன்று வருகை: 5,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா்

திருப்பத்தூா் அருகே தனியாா் பள்ளியில் சனிக்கிழமை (மாா்ச் 13) நடைபெறும் நிகழ்ச்சியில் 5,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியில் நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறாா்.

News image

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 1:08 am

திருப்பத்தூா் அருகே தனியாா் பள்ளியில் சனிக்கிழமை (மாா்ச் 13) நடைபெறும் நிகழ்ச்சியில் 5,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியில் நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிகிறாா். அவா் திருப்பத்தூா் அருகே பாச்சல் பகுதியில் உள்ள தனியாா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முடிவுற்ற பல்வேறு பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில், 4,949 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியே 22 லட்சத்து 382 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

தொடா்ந்து திருப்பத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக சாா்பு அணிகளின் நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா் ஜோலாா்பேட்டையில் கலைஞா் நூலகத்தையும், வாணியம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூலகத்தையும் திறந்து வைக்கிறாா்.

துணை முதல்வா் வருகையையொட்டி, எஸ்.பி. வி.சியாமளாதேவி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.