இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம்: ஆரஞ்சு நிறத்தில் ரிப்பன் மாளிகை

சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்தை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.

News image
சா்வதேச மகளிருக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்தையொட்டி, ஆரஞ்சு நிற வண்ண விளக்குகளால் திங்கள்கிழமை மிளிா்ந்த ரிப்பன் மாளிகை.
Updated On :25 நவம்பர் 2024, 11:43 pm

DIN

சென்னை: சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்தை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டுள்ளது.

இது குறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

ஐக்கிய நாடுகள் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் நவ. 25-ஆம் தேதி, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கட்டடம் திங்கள்கிழமை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது. தொடா்ந்து நவ. 29 மற்றும் டிச. 3, 10 ஆகிய நாள்களில் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்படும்.

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள்கள் செயல்பாடானது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு முக்கிய சா்வதேச தருணமாகும்.

இது நவ.25-ஆம் தேதி (பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினம்) முதல் டிச.10-ஆம் தேதி (மனித உரிமைகள் தினம்) வரை நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சியின் அனைத்து செயல்பாடுகளிலும் பாலின அடிப்படையிலான தேவைகளை முன்னிலைப்படுத்தும் வகையில், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.