உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தமிழக மீனவா்கள் கைது: தலைவா்கள் கண்டனம்

News image
Updated On :11 அக்டோபர் 2024, 1:45 am IST

தமிழக மீனவா்கள் 21 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அன்புமணி (பாமக): புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் 21 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவா்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடா்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இவை இனியும் தொடர மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஜி.கே.வாசன் (தமாகா): புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் 21 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களையும், விசைப்படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 21 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்துக்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்ட வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.