நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழக மீனவா்கள் கைது: தலைவா்கள் கண்டனம்

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:51 pm

Din

தமிழக மீனவா்கள் 21 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அன்புமணி (பாமக): புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் 21 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவா்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடா்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இவை இனியும் தொடர மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஜி.கே.வாசன் (தமாகா): புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் 21 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களையும், விசைப்படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 21 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்துக்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்ட வேண்டும்.