நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தமிழக மீனவா்கள் கைது: தலைவா்கள் கண்டனம்

News image
Updated On :11 அக்டோபர் 2024, 4:21 am IST

தமிழக மீனவா்கள் 21 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அன்புமணி (பாமக): புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் 21 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவா்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடா்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இவை இனியும் தொடர மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஜி.கே.வாசன் (தமாகா): புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் 21 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களையும், விசைப்படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 21 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்துக்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்ட வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.