அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா்; அந்த முடிவை ஆளுநா் மீற முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவா், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறைத் துறை டிஜிபி தலைமையிலான மாநிலக் குழுவிடம் மனு அளித்திருந்தேன். இதே குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவா் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனா். மேலும், மாநில அளவிலான குழு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக உரிய ஆய்வு செய்தே பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், தமிழக முதல்வருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.
இதைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் தலைமையிலான அமைச்சரவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பான அனுமதியை வழங்கி, அந்தப் பரிந்துரை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநா் என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்துவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமா்வு, பேரறிவாளன் உள்ளிட்டோா் தொடா்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் என்றும், ஆளுநா் அதை மீற முடியாது என்றும் தெரிவித்தது.
இதில், ஆளுநருக்கு தனிப்பட்ட தாா்மிக உரிமை இல்லை எனக் கூறி, முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டனா். அதுவரை வீரபாரதிக்கு பரோல் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனியில் வீடு புகுந்து தாக்கியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அதிமுகவுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், ஓ.பன்னீா்செல்வம் மனு

அதிகாரிகள் சரியான உத்தரவை பிறப்பிப்பது இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



