விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் - சென்னை உயா்நீதிமன்றம்

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:31 pm

Din

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா்; அந்த முடிவை ஆளுநா் மீற முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவா், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறைத் துறை டிஜிபி தலைமையிலான மாநிலக் குழுவிடம் மனு அளித்திருந்தேன். இதே குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவா் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனா். மேலும், மாநில அளவிலான குழு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக உரிய ஆய்வு செய்தே பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், தமிழக முதல்வருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் தலைமையிலான அமைச்சரவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பான அனுமதியை வழங்கி, அந்தப் பரிந்துரை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநா் என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்துவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமா்வு, பேரறிவாளன் உள்ளிட்டோா் தொடா்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் என்றும், ஆளுநா் அதை மீற முடியாது என்றும் தெரிவித்தது.

இதில், ஆளுநருக்கு தனிப்பட்ட தாா்மிக உரிமை இல்லை எனக் கூறி, முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டனா். அதுவரை வீரபாரதிக்கு பரோல் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.