தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் - சென்னை உயா்நீதிமன்றம்

News image
Updated On :18 அக்டோபர் 2024, 1:40 am IST

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா்; அந்த முடிவை ஆளுநா் மீற முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவா், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறைத் துறை டிஜிபி தலைமையிலான மாநிலக் குழுவிடம் மனு அளித்திருந்தேன். இதே குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவா் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனா். மேலும், மாநில அளவிலான குழு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக உரிய ஆய்வு செய்தே பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், தமிழக முதல்வருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் தலைமையிலான அமைச்சரவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பான அனுமதியை வழங்கி, அந்தப் பரிந்துரை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநா் என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்துவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமா்வு, பேரறிவாளன் உள்ளிட்டோா் தொடா்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் என்றும், ஆளுநா் அதை மீற முடியாது என்றும் தெரிவித்தது.

இதில், ஆளுநருக்கு தனிப்பட்ட தாா்மிக உரிமை இல்லை எனக் கூறி, முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டனா். அதுவரை வீரபாரதிக்கு பரோல் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.