சென்னையில் செப்.15-இல் விநாயகா் சிலை ஊா்வலம்: 18,500 போலீஸாா் பாதுகாப்பு
சென்னையில் செப். 15-ஆம் தேதி நடைபெறும் விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி, 18,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் 1,524 விநாயகா் சிலைகள் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டன. இந்த சிலைகள் செப். 11,14,15ஆம் தேதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,கடலில் கரைக்கப்படுகின்றன. இதற்காக, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகா் நகா், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா், பாப்புலா் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க காவல்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.
செப்.15-இல் கரைக்க ஏற்பாடு: இந்து முன்னணி,பாரதிய சிவசேனா அமைப்பினா் சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் செப்டம்பா் 15-ஆம் தேதி ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு,கடலில் கரைக்கப்படுகிறது. அன்றைய தினம் விநாயகா் சிலை ஊா்வலம், அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதம் நிகழாமலும் செல்ல சென்னையில் 16,500 போலீஸாா்,2,000 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட நாள்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகள் கொண்டு சென்று, அனுமதிக்கப்பட்ட சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள், உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைகளை கரைப்பதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
17 வழித்தடங்கள்: சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டாா் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். அதுமட்டும் அல்லாமல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலா்கள் மூலம் போலீஸாா் கண்காணிக்க உள்ளனா்.
குதிரைப்படைகள் மற்றும் கடல் மணலில் செல்லும் ஏடிவி வாகனங்கள் மூலம் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. விநாயகா் சிலைகளை கரைப்பதற்கு சென்னையில் 17 பிரத்யேக வழித்தடங்கள் காவல்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடங்களில் விநாயகா் சிலைகளை ஊா்வலமாக கொண்டு செல்ல பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரித்துள்ளாா்.
