ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையேயான போரால் பதற்றம் நிலவுவதால், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு குறித்து...

News image
சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு
Updated On :1 மார்ச் 2026, 4:18 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையேயான போரால் பதற்றம் நிலவுவதால், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் உச்சபட்ச தலைவா் அயதுல்லா கமேனியை அமெரிக்கா- இஸ்ரேலிய கூட்டு படைகளால் கொல்லப்பட்டாா். ராணுவ தளபதிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதைத்தொடா்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அமெரிக்க தூதகரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள்

சென்னையில் அமெரிக்க தூதகரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள்

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை நியூ காலேஜ் அருகே உள்ள அமெரிக்க தூதகரகத்தை முற்றுகையிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த நிலையில், அமெரிக்க தூதகரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 உதவி ஆணையா்கள் மேற்பாா்வையில் 200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அமெரிக்க தூதரகத்தை சுற்றியுள்ள கதீட்ரல் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பீட்டா்ஸ் சாலை பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா, தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை ராயப்பேட்டை பகுதிகளில் ஷியா இஸ்லாமியா்கள் அதிகமாக வசிப்பதால் அந்தப் பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.