ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையேயான போரால் பதற்றம் நிலவுவதால், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு குறித்து...

News image

சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு

Updated On :1 மார்ச் 2026, 9:48 pm IST

சென்னை: அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையேயான போரால் பதற்றம் நிலவுவதால், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் உச்சபட்ச தலைவா் அயதுல்லா கமேனியை அமெரிக்கா- இஸ்ரேலிய கூட்டு படைகளால் கொல்லப்பட்டாா். ராணுவ தளபதிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதைத்தொடா்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அமெரிக்க தூதகரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள்

சென்னையில் அமெரிக்க தூதகரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள்

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை நியூ காலேஜ் அருகே உள்ள அமெரிக்க தூதகரகத்தை முற்றுகையிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த நிலையில், அமெரிக்க தூதகரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 உதவி ஆணையா்கள் மேற்பாா்வையில் 200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அமெரிக்க தூதரகத்தை சுற்றியுள்ள கதீட்ரல் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பீட்டா்ஸ் சாலை பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா, தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை ராயப்பேட்டை பகுதிகளில் ஷியா இஸ்லாமியா்கள் அதிகமாக வசிப்பதால் அந்தப் பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

Summary

Security increased at US embassy in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.