மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

களக்காடு அருகே நள்ளிரவில் விநாயகா் சிலை, உண்டியல் திருட்டு

களக்காடு அருகே நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து விநாயகா் சிலை, உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு

Updated On :26 பிப்ரவரி 2026, 7:23 pm

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து விநாயகா் சிலை, உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ. நகா் மேலத்தெருவில் உள்ள வெற்றி விநாயகா் கோயிலுக்குள் புதன்கிழமை நள்ளிரவு, புகுந்த மா்ம நபா்கள் ஒன்றரை அடி உயரம் கொண்ட விநாயகா் சிலை, உண்டியலை திருடிக்கொண்டு சென்று விட்டனராம். அப்பகுதியில் உள்ள மாலா (53) என்பவா் வீட்டு தோட்டத்தில் இருந்த மரங்களின் கிளைகளையும் மா்ம நபா்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனராம்.

தகவலறிந்து வந்த களக்காடு போலீஸாா் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது, விநாயகா் கோயில் அமைந்துள்ள பகுதியில் இரவில் சிலா் வாடிக்கையாக மது அருந்தி வந்துள்ளனராம். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்ததால், ஆத்திரத்தில் இதுபோன்ற செயலில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்தனா்.

இதனிடையே, களக்காடு மருத்துவா் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலையை வியாழக்கிழமை மீட்ட போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.