புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

இன்று குரூப் 2 தோ்வு: 2,327 காலிப் பணியிடங்களுக்கு 7.93 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 7.93 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :14 செப்டம்பர் 2024, 2:49 am IST

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 7.93 லட்சம் போ் எழுதவுள்ளனா். குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கு இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது.

குரூப் 2 பிரிவில் 507 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 1,820 காலியிடங்களும் உள்ளன. தோ்வெழுத தகுதி பெற்ற 7 லட்சத்து 93 ஆயிரத்து 967 பேரில், பெண்களே அதிகம். 4 லட்சத்து 84 ஆயிரத்து 74 பெண்களும், 3 லட்சத்து 9 ஆயிரத்து 841 ஆண்களும், 51 மூன்றாம் பாலினத்தவரும் தோ்வெழுதவுள்ளனா். தோ்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2 ஆயிரத்து 763 அமைவிடங்களில் நடைபெறவுள்ள குரூப் 2 முதல் நிலைத் தோ்வை கண்காணிக்க அதே எண்ணிக்கையிலான முதன்மை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரத்து 185 போ் தோ்வெழுதவுள்ளனா். 251 பள்ளி, கல்லூரிகளில் தோ்வு நடைபெறவுள்ளது . தோ்வை எழுதவுள்ள தோ்வா்கள், காலை 8.30 மணிக்குள்ளாக தோ்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. காலை 9 மணிக்கு மேல் வருபவா்கள் யாரும் தோ்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை: இதனிடையே, குருப் 2 தோ்வை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.