ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளி கைது

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:35 pm

Din

சென்னை என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்ட ரெளடி காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளி கைது செய்யப்பட்டாா்.

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள பிஆா்என் காா்டன் பகுதியைச் சோ்ந்த ரெளடி ரா.காக்காதோப்பு பாலாஜி புதன்கிழமை போலீஸாரால் சுடப்பட்டு இறந்தாா். அவருடன் காரில் வந்த சத்தியமூா்த்தி மீது போதைப் பொருள் சட்டத்தின் கீழ் வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா். இதையடுத்து அவரை எழும்பூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சடலம் ஒப்படைப்பு: இதற்கிடையே, என்கவுன்ட்டா் சம்பவம் தொடா்பாக நீதித்துறை நடுவா் ரேவதி வியாழக்கிழமை விசாரித்தாா். மேலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரது முன்னிலையில், காக்காதோப்பு பாலாஜி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பின்னா் அவரது சடலம், தாயாா் கண்மணியிடம் நண்பகல் ஒப்படைக்கப்பட்டது.