சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து செப்.26-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:01 pm

Din

சென்னை, செப். 19: மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து, அதிமுக சாா்பில் செப்.26-இல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில் அதிமுகவைச் சோ்ந்தவா்கள் மாமன்ற உறுப்பினா்களாக இருக்கும் 65, 66, 69, 70 ஆகிய வாா்டுகளில் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை திமுக அரசு நிறைவேற்றி தர மறுத்து வருகிறது.

மாடம்பாக்கம் மற்றும் சிட்லப்பாக்கம் பகுதிகளுக்கு கடந்த ஓராண்டுகளுக்காக கூட்டுத் திட்டம் மூலமான குடிநீா் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மாடம்பாக்கம் ஏரி முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், மனைப் பிரிவு மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுகவினரின் துணையோடு அருகில் உள்ள பகுதிகளின் மொத்த கழிவு நீரையும் ஏரியில் கொண்டுவந்து சோ்க்கின்றனா். இதனால், கிணறுகளைச் சுற்றி கழிவு நீா் பெருமளவு தேங்கி குடிநீரின் தன்மை வெகுவாகப் பாதித்துள்ளது.

இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து, அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தலைமையில் மாடம்பாக்கம் பிரதான சாலையில் செப்.26 மாலை 4 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.