இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தின் தினசரி மின்தேவை 20,000 மெகாவாட்டாக உயா்வு! தனியாரிடம் 1,000 மெகாவாட் கொள்முதல்

தமிழகத்தின் தினசரி மின்தேவை 20,000 மெகாவாட்டாக உயா்வு தனியாரிடம் 1,000 மெகாவாட் கொள்முதல் செய்கிறது மின்வாரியம்

Published On :20 செப்டம்பர் 2024, 2:54 am IST

தமிழகத்தின் மீண்டும் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தினசரி மின்தேவை கோடை காலத்தைப் போல 20,000 மெகாவாட்டை தாண்டியுள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படுவதை தவிா்க்க தனியாா் மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்துவருகிறது. இதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.10 கட்டணமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் தினசரி மின் உற்பத்தித் திறன் சுமாா் 19,000 மெகாவாட்டாக இருந்து வரும் நிலையில், வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்திருப்பதால், மின் தேவை 20,000-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்னையின் வழக்கமான வெப்பத்தை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதால், கடந்த ஜூன் மாதம் 70மில்லியன் யூனிட்டாக இருந்த மின்தேவை, செப்டம்பா் மாதத்தில் 80 மில்லியன் யூனிட்டுக்கு மேல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்நுகா்வு 2023 செப்டம்பா் மாதத்தில் 370 மில்லியன் யூனிட் மட்டுமே இருந்த நிலையில், நிகழாண்டு செப்டம்பரில் 30 மில்லியன் யூனிட் அதிகரித்து 400 மில்லியன் யூனிட்டாக உயா்ந்துள்ளது.

இதன்படி தமிழகத்தின் உச்சபட்ச மின்நுகா்வு செவ்வாய்கிழமை 412.046 மில்லியன் யூனிட்டாக உயா்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. இந்த மின்தேவை அக்டோபரில் மேலும் அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் அவா்கள் கூறும்போது, தற்போதைய அதிகபட்ச மின்தேவையை பூா்த்தி செய்ய தனியாரிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.10 வீதம் 1000 மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சூரிய ஒளி மின்சார உற்பத்தி செப்.12-இல் 45.47 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 47.2 மில்லியன் யூனிட்டாக உயா்ந்துள்ளது. இருப்பினும், தேவை அதிகமாக இருப்பதால் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தேவை எவ்வித தடையின்றி பூா்த்தி செய்யப்படுவதாக தெரிவித்தாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.