திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளா்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு முன்னிலையில் செய்யப்பட்டது.
தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் பணிபுரியும் 1,500 பெண் பணியாளா்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்பு வளாகம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தப் பூங்காவில் குடியிருப்பு வளாகம் ரூ.40 கோடியில் 870 பெண் பணியாளா்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. சிப்காட் பூங்காவில் டிபி. சோலாா் நிறுவனம் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது.
அந்தப் பணியாளா்களில் 80 சதவீதம் போ் பெண்கள். அவா்களில் 500 பெண் பணியாளா்களுக்கு புதிதாக அமையவுள்ள குடியிருப்பில் தங்கும் வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான ஒப்பந்தம் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை கையொப்பமானது.
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் டாடா பவா் நிறுவனத்தின் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில், இரண்டு நிறுவனங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

என்எல்சி-தன்பாத் ஐஐடி டெக்ஸ்மின் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

அணுசக்தித் திட்டங்கள்: இந்திய அணுசக்தி கழகம் - என்எல்சி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
இணையவழி மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்க புதிய ஒப்பந்தம்: அமித் ஷா

நெல்லை அருகே பெண் தற்கொலை
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



