ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி

ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்களை நிறுத்தும் வகையில், வாகன நிறுத்தமிடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :20 செப்டம்பர் 2024, 8:51 pm

Din

ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்களை நிறுத்தும் வகையில், வாகன நிறுத்தமிடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில், 1,300 இருசக்கர வாகனங்களும், 180 நான்கு சக்கர வாகனங்களும் மட்டுமே நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனா். இதனால், வாகன நிறுத்துமிடத்தை விரிவுபடுத்த பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், ரயில் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு பின்புறம், புதிய வாகன நிறுத்துமிடத்தை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. இந்த புதிய வாகன நிறுத்துமிடத்தை மெட்ரோரயில் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) திறந்து வைத்தாா். இதன் மூலம் கூடுதலாக 300 இருசக்கர வாகனங்களை நிறுத்தமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.