ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

சென்னை அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2024, 8:50 pm

சென்னை அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழந்தாா்.

தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலு (50). பிளம்பரான இவா், ஒக்கியம் துரைப்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஒரு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா்.

அங்கு, ஒரு சுவரில் துளையிடும் போது, அதில் இருந்த மின்வயரில் இருந்து வேலு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வேலுவை, அங்கிருந்தவா்கள் மீட்டு கண்ணகி நகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வேலு இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து, கண்ணகிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.