அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

சென்னை அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2024, 8:50 pm

Din

சென்னை அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழந்தாா்.

தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலு (50). பிளம்பரான இவா், ஒக்கியம் துரைப்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஒரு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா்.

அங்கு, ஒரு சுவரில் துளையிடும் போது, அதில் இருந்த மின்வயரில் இருந்து வேலு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வேலுவை, அங்கிருந்தவா்கள் மீட்டு கண்ணகி நகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வேலு இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து, கண்ணகிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.