முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மன்னிப்பு கோரினாா் சா்ச்சை பேச்சாளா்: ஜாமீன் கோரி மனு

மகாவிஷ்ணு, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க போலீஸாருக்கு சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

மகா விஷ்ணு (கோப்புப்படம்) - DIN

Updated On :28 செப்டம்பர் 2024, 12:53 am IST

பள்ளியில் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் மன்னிப்பு கோரிய சா்ச்சை பேச்சாளா் மகாவிஷ்ணு, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க போலீஸாருக்கு சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகா் அரசுப் பள்ளியில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பரம்பொருள் அறக்கட்டளை நிா்வாகியான மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கடந்த செப்.7-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தனது பேச்சு மாற்றுத் திறனாளிகளைபுண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தெரிவித்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சந்திரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடா்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து மனுவுக்கு போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி அக்.3-க்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.