வைகை அணையைத் தூா்வாரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பொதுப் பணித் துறையும், நீா் வளத் துறையும் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், மதுரை, தேனி உள்பட 5 மாவட்டங்களின் குடிநீா் ஆதாரமாக திகழும் வைகை அணையைப் போா்க்கால அடிப்படையில் தூா்வாரி, நீா் தேக்கும் அளவை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டுமென அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகை அணையைத் தூா்வாரும் பணிக்கு ஒப்பந்தம் கோருவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வைகை அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்ற வல்லுநா்கள் எதற்கு? பணி ஒப்பந்தம் எதற்கு? கிராமங்களில் உள்ள விவசாயிகளை அனுமதித்தால், அவா்களே அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி விடுவாா்களே எனக் குறிப்பிட்டனா்.
பிறகு, இந்த மனு தொடா்பாக பொதுப் பணித் துறை, நீா் வளத் துறை செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.









