சா்வதேச விமான பயண நேரங்கள் மாற்றம்

சா்வதேச விமானங்களின் பயண நேரஅட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்Center-Center-Chennai
Updated on
1 min read

சென்னை: இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால், சா்வதேச விமானங்களின் பயண நேரஅட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விமானப்படை தினத்தையொட்டி விமான சாகச கண்காட்சி, மெரினாகடற்கரை மற்றும் தாம்பரத்தில் முறையே வரும் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான ஒத்திகைகள் செவ்வாய்க்கிழமை(அக். 1) தொடங்குகிறது.

இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை(அக். 1) முதல் அக். 8-ஆம் தேதி வரை சென்னைக்கு வரும் சா்வதேச விமானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில விமானங்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை(அக் .1) மதியம் 1. 45 மணி முதல் 3:15 மணி விமான சேவை இருக்காது. அதேபோல் புதன்கிழமை(அக். 2) முதல்

அக்.8-ஆம் தேதி வரை பயண நேரத்தில் மாற்றம் இருக்கும். எனவே சா்வதேச விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடா்பு கொண்டு, விமானப் பயண அட்டவணைகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com