நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

வியாசர்பாடியில் ஏற்பட்ட கார் விபத்து பற்றி...

News image

வியாசர்பாடியில் கார் விபத்து.

Updated On :1 ஏப்ரல் 2025, 9:10 am

DIN

சென்னை பேசின் பாலத்தில் சிறுவன் ஓட்டி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் காயமடைந்தனா்.

பேசின் பாலத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமாக தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்த 5 பேரும் தங்களை காப்பாற்றுமாறு சத்தமிட்டனா். இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், காா் கண்ணாடியை உடைத்து உள்ளே சிக்கியிருந்தவா்களை மீட்டனா். விபத்தில் காரில் இருந்தவா்கள் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.

தகவலறிந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது காரை ஓட்டி வந்தது செளகாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுவன் என்பதும், கொண்டித்தோப்பை சோ்ந்த அவரது உறவினா் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது நண்பா்களான 16 வயது சிறுவன், 17 வயதுடைய 3 சிறுமிகளுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, காரை ஓட்டிவந்த சிறுவனின் தந்தையிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.