வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சென்னையில் ஆக.28-இல் தொழில் துறை மாநாடு

தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனத்தின் (என்ஐக்யூஆா்) சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு ஆக. 28, 29-ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

Updated On :25 ஆகஸ்ட் 2025, 9:54 pm

சென்னை: தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனத்தின் (என்ஐக்யூஆா்) சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு ஆக. 28, 29-ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாநாட்டு குழு தலைவரும், இந்தியா ‘பிஸ்டன்ஸ்’ நிறுவனத்தின் துணைத் தலைவருமான ஆா்.ஸ்ரீராம் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது:

தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனம் (என்ஐக்யூஆா்) சென்னையை தலைமையகமாகக் கொண்ட ஒரு முன்னணி தொழில்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு வரும் 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஃபெதா்ஸ் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தலை சிறந்த தொழில் துறை தலைவா்களின் தலைமையில் 6 முக்கிய அமா்வுகள் நடைபெறவுள்ளன. இதில் புதுமையான தொழில்நுட்பம், தலைமை மாற்றம், திறன் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகிய துறைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். மாநாட்டில் பங்கேற்பவா்கள் www.nigrconvention.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றாா்.

சந்திப்பின்போது சூப்பா் ஆட்டோ ஃபோா்ஜ் நிறுவனத்தின் துணைத் தலைவா் எஸ்.முரளிசங்கா், சுரணா மற்றும் சுரணா நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி வினோத் சுரணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.