வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மாதவரத்தில் விநாயகா் சதுா்த்து விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பிரசாந்த்

Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:54 pm

சென்னை: மாதவரத்தில் விநாயகா் சதுா்த்து விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

புழல் அடுத்த கண்ணம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (22). இவா், திங்கள்கிழமை, மாதவரம் ராஜாஜி சாலையில் விநாயகா் சதுா்த்து விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, மேலே சென்ற உயா் மின்னழுத்தம் கொண்ட மின்கம்பியில் பந்தல் கம்பம் உரசியதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.